Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

* காமன்வெலத் போட்டியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி * மதுரைக்கு ஜெ., வருகை தள்ளிப்போகும்? * அமெரிக்காவில் 49மில்லியன் பேர் உணவின்றி தவிப்பு * ரேஷனில் ரூ.25 மளிகைப் பொருள் : வாங்க மக்கள் ஆர்வம்

இன்றைய முக்கிய செய்திகள்

Download latha tamil font


South Indian Crime Point as your Homepage

முக்கிய செய்திகள் (03-09-2010) காலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,

காமன்வெலத் போட்டியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி

காமன்வெல்த் போட்டியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனையடுத்து போட்டி நடக்கும் மைதானங்கள் மற்றும் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காமன்வெலத் போட்டிக்கு ஏற்கனவே நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளன.

  • மதுரைக்கு ஜெ., வருகை தள்ளிப்போகும்?

    மதுரைக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் நிகழ்ச்சி, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போகும் என தெரிகிறது. கோவை, திருச்சிக்குப் பிறகு, மதுரையில் ஜெயலலிதா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை நடத்தி, பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்ட, அ.தி.மு.க,. முடிவு செய்தது. இதற்காக, மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தை அக்கட்சி செப்., 17 முதல் 21 வரை வாடகைக்கு பெற விண்ணப்பித்தது.

    மைதானத்தை தர மறுத்த மாநகராட்சி, "அப்போது மருத்துவ முகாம் நடத்த உள்ளோம்' என பதில் அளித்தது. இதை எதிர்த்து, அ.தி.மு.க.,வினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து, நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த, அக்கட்சியினர் தயாராயினர். இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு, போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "தமுக்கம் மைதானம், நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் இருக்கிறது. பெருங்கூட்டம் கூடினால், நெரிசல் ஏற்படும். மைதானத்தைச் சுற்றி, உயரமான கட்டடங்கள் இருப்பதால், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும். எனவே, நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்க வேண்டும்' என கேட்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால், ஜெயலலிதா வருகையை தள்ளி வைத்து, வேறொரு இடத்தில் நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



    சிதம்பரம் வருகை தந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.



    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் பகுதியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில், ஊட்டியில் திரண்டிருந்த நிருபர்களிடம், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேட்டியளித்தார்.



    திருவள்ளூர் தேரடி அருகே ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அருகில் மாவட்ட செயலாளர் டி.ஆர்.செங்குட்டுவன்.



    செங்கல்பட்டில் நடந்த கல்விக் கடன் வழங்கும் முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடனுக்கான காசோலையை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழங்கினார். அருகில் அமைச்சர் அன்பரசன்.



    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.



    சென்னை ஐ.சி.எப்.பில், ரயில்வே தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கவன ஈர்ப்பு கூட்டத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி பங்கேற்று பேசினார்.



    மெரிட் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், ஊட்டியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் வித்தியாசமான முகமூடியுடன் வந்து, எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறித்து விளக்கிய மாணவன்.

  • அமெரிக்காவில் 49மில்லியன் பேர் உணவின்றி தவிப்பு

    அமெரிக்காவில் வசிப்பவர்களில் 49மில்லியன் பேர் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். அமெரிக்க டயடிக் அசோஷியேசன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறியிருப்பதாவது: பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு போதிய வேலையின்மை, முறையான வரவு-செலவின்மை, மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. மேலும் பெரும்பாலான நகரங்களில் வீட்டு பராமரிப்பு, மருத்துவ செலவு, குழந்தை பராமரிப்பு மற்றும் அன்றாட செலவுகள் போன்றவை அவர்களின் வருமானத்தை காட்டிலும் அதிகமாக உள்ளன. உதாரணமாக சில நகரங்களில் ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை 7டாலராக உள்ளது. இதபோன்ற காரணங்களால் அங்கு வசிப்பவர்களில் 49மில்லியன் பேருக்கும் அதிகமான பேர், அதாவது 3ல் ஒருவருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று தகவல் வெளயிட்டுள்ளது.



  • புதுடில்லியில், காங். கட்சி தலைவர் தேர்விற்கான வேட்புமனுவை, சோனியா தாக்கல் செய்தார். அருகில் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் மற்றும் மூத்த தலைவர் கருணாகரன்.



    ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியினர், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் முதலாமாண்டு நினைவு நாளை அனுஷ்டித்தனர்.



    சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்த் சாகிப் எழுதப்பட்ட 406வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பொற்கோவிலில் வண்ணமிகு விழா நடந்துவருகிறது. இதனை முன்னிட்டு பொற்கோவில் வண்ண விளக்குகளால் மின்னுகிறது.



    காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ராணுவ வீரர்களும், மக்களும் பலியாகி வருகின்றனர். மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.



    பீகாரில் நக்சலைட்களின் வெறியாட்டத்தில் சப் - இன்ஸ்பெக்டர் அபய் பிரசாத் யாதவ் கொலை செய்யப்பட்டார். பாட்னாவில் உள்ள முதல்வர் நிதிஷ்குமார் வீட்டை அபய் பிரசாத் மனைவி மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

  • ரேஷனில் ரூ.25 மளிகைப் பொருள் : வாங்க மக்கள் ஆர்வம்

    தமிழக அரசின் 25 ரூபாய் மளிகை பாக்கெட் விற்பனை ரேஷன் கடைகளில் அமோகமாக நடந்து வருகிறது. தேவைக்கேற்ப எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். விலையை கட்டுப்படுத்தக்கோரி வீதிக்கு வந்து, பல்வேறு அமைப்புக்கள் போராடும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

    இந்த நிலையில், மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் மூலம், மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பட்டை, லவங்கம் கொண்ட பாக்கெட் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய மக்கள் பின், தயக்கம் காட்டினர். இவற்றை 25 ரூபாய் பாக்கெட்டுகளாக குறைத்து வழங்கினால், வாங்க வசதியாக இருக்கும் என கிராமப்புற மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    அதன்படியே, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு பொருட்களின் அளவை குறைத்து, 25 ரூபாய் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி 25 ரூபாய் மளிகை பாக்கெட்டுகள் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதில் தனியா தூள் 100, மிளகாய் தூள் 100, மிளகு தூள் 25, சீரகம் 25, சோம்பு 25, வெந்தயம் 25, கடுகு 25, கடலை பருப்பு 50, உளுந்தம் பருப்பு 50, கரம் மசாலா தூள் 15 கிராமும் பாக்கெட்டில் உள்ளன.

    இந்த பாக்கெட்டுகள் 25 ரூபாய்க்கு கிடைப்பதால், இவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தனியார் ஏஜன்சியிடமிருந்து, கோபாலபுரத்தில் உள்ள கிடங்கிற்கு, மளிகை பாக்கெட்டுகள் வந்து குவிந்துள்ளன. இங்கிருந்து சென்னையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும் போது, "பொதுமக்கள் எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம். மற்ற பொருட்கள் வாங்கும் போது தான் வாங்க வேண்டும் என்று இல்லை. தேவைக்கேற்ப ரேஷன் கடைகளுக்கு மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது' என்றனர்.



    வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் நடந்த மத்திய கிழக்கு நாடுகளின்(இஸ்ரேல்-பாலஸ்தீனம்) அமைதி பேச்சுவார்த்தை குறித்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசுவதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யகு(இடமிருந்து)ஜோர்டான் மன்னர் 2ஆம்அப்துல்லா, எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கவனிக்கின்றனர்.



    தென்னாப்பிரிக்காவில் கூலி உயர்வு அளிக்க கோரி அந்நாட்டு பல்வேறு யூனியன் உறுப்பினர்கள் ஜொகன்னஸ்பர்க்கில் பாட்டுபாடி நடனம் ஆடியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.



    அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள "டிஸ்கவரி சேனல்' தலைமை அலுவலகத்தில் மூன்று பேரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, மிரட்டிய ஜேம்ஸ் லீயை போலீசார் சுட்டுக்கொன்றனர். உள்படம்: ஜேம்ஸ் லீ.



    யு.எஸ்., ஓபன் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில், பிரான்சின் அர்னாடு சிலிமன்ட், நிகோலஸ் மகுத் ஜோடியை வீழ்த்திய, இந்தியாவின் மகேஷ் பூபதி (வலது), பெலாரசின் மேக்ஸ் மிர்னி ஜோடி.



    மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாக்கிஸ்தானில் ,"முசாபார்கார்என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்ட பல ஆயிரம் குடும்பத்தினரில் இந்த முதியவரும் ஒருவர்,எப்போதாவது வரும் உணவிற்கு கண்களில் கவலை பொங்க உட்கார்ந்து இருக்கிறார்.



    ஸ்பெயின் நாட்டின் மாட்ரில் நகரில் வேலைவாய்ப்பு கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்ய வரிசையில் காத்திருந்த அந்நாட்டவர்கள்.

    நேற்றைய செய்திகள்

    Bookmark and Share
  • Read More     Comments (33)