3 நாள் அரசுமுறை பயணமாக சீன பிரதமர் லீ
இன்று டெல்லி வருகிறார்
எல்லையில் அத்துமீறல், அணை பிரச்சினை குறித்து பேச்சு
புதுடெல்லி, மே, 19-
சீன பிரதமர் லீ 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வருகிறார். அவருடன் அத்துமீறல், எல்லை, அணை பிரச்சினைகள் குறித்து இந்தியா பேசத்திட்டமிட்டுள்ளது.
நீண்டகால பிரச்சினை
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில், லடாக் எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து, தவுலத் பெக் ஒல்தி பகுதியில் கூடாரங்களை அமைத்து பிரச்சினை ஏற்படுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற
தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி
சண்டையில் ராணுவ அதிகாரி பலி
ஸ்ரீநகர், மே, 19-
காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி பலி ஆனார். மேலும் ஒரு வீரர் காயம் அடைந்தார்.
தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி
காஷ்மீர் மாநிலத்தில் கோடை காலத்தில் குளிர் குறைவாக இருக்கும் என்பதால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பது வழக்கம்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்
சென்னையைச் சேர்ந்த மேலும் 10 தரகர்களுக்கு தொடர்பு
6 தனிப்படை அமைத்து போலீசார் தேடுகிறார்கள்
சென்னை, மே, 19-
கிரிக்கெட் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த 1½ மாதங்களாக நடந்து வருகிறது.
இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன், பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அதையும் விஞ்சும் பரபரப்பாக கிரிக்கெட் சூதாட்டம் வெளியானது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விசாரணை அறிக்கை
பாராளுமன்ற கூட்டுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
புதுடெல்லி, மே, 19-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விசாரணை பற்றிய வரைவு அறிக்கை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பாராளுமன்ற கூட்டுக்குழு அடுத்த மாதம் கூடும் என்று தெரிகிறது.
கூட்டுக்குழு வரைவு அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி தனது வரைவு
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கட்கிழமை கடைசி நாள்
ரேங்க் பட்டியல் 6–ந் தேதி வெளியிடப்படுகிறது
சென்னை, மே, 19 -
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும். மருத்துவ படிப்பில் சேர 32,050 பேர் விண்ணப்பம் வாங்கி உள்ளனர். ரேங்க் பட்டியல் அடுத்த மாதம் (ஜூன்) 6–ந் தேதி வெளியிடப்படுகிறது.
1,823 இடங்கள்
தமிழ்நாட்டில் சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் ஒரேயொரு
திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் கேட்டு
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடத்தல்; 4 பேர் கைது
திருவண்ணாமலை, மே, 19 -
திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் கேட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு மடத்தில் சிறை வைக்கப்பட்டு இருந்த மாணவர் மீட்கப்பட்டார். அவரை கடத்த பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசின்
2 ஆண்டு சாதனை புகைப்படக் கண்காட்சி
சென்னை, மே, 19 -
செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சியை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் நேற்று திறந்து வைத்தனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் கண்டுகளிக்கலாம்.
‘‘சாதனை புரிந்த ஈராண்டு, சரித்திரம் பேசும் பல்லாண்டு’’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கண்காட்சியை தேனி மாவட்டம், சில்லமரத்துப்பட்டியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டியானப்பள்ளியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தஞ்சாவூரில் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், சென்னையில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, விருதுநகர் மாவட்டம், ஆனையூர் ஊராட்சி ரிசர்வ்லைனில் செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், அரியலூர், கடலூர், பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் திறந்துவைத்தனர்.
இந்த விழாவில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஈராண்டு சாதனை கண்காட்சி: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
சென்னை, மே.19 -
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி மாவட்டங்களில் அமைச்சர்கள் நேற்று (18.5.2013) திறந்து வைத்தார்கள் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியினை நேற்று அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி 18.5.2013 மற்றும் 19.5.2013 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
``சாதனை புரிந்த ஈராண்டு
சரித்திரம் பேசும் பல்லாண்டு''
என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அரசு விழாக்கள், கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள புகைப்படங்கள் போன்ற அரிய புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இக்கண்காட்சியை தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டியில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதனும், கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டியானப்பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியும், தஞ்சாவூரில் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கமும், சென்னையில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதியும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை எஸ். துரைசாமியும், தர்மபுரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பனும், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் வேளாண்மைத் துறை அமைச்சர் செ. தாமோதரனும், மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூம் மற்றும் தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையனும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமாலும், சேலத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியும், திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜும், திருவள்ளூரில் பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தியும் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணாவும், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னய்யாயும், நாமக்கல்லில் தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணியும், இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களத்தில் கைத்தறித் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை சிரானூர்பார்டரில் சுற்றுலாத் துறை அமைச்சர்
பூ. செந்தூர் பாண்டியனும், புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியனும், கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜியும், நாகப்பட்டினம் மாவட்டம் ஆண்டக்குடியில் மீன்வளத்துறை அமைச்சர் கே. ஜெயபாலும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியனும், விருதுநகர் மாவட்டம் ஆனையூர் ஊராட்சி ரிசர்வ்லைனில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியும், தூத்துக்குடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியனும், வேலூர் மாவட்டம் சித்தூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அ. முஹம்மத்ஜானும், திருப்பூர் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும், ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலமும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் டி.பி. பூனாச்சியும் மற்றும் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரனு திறந்து வைத்தார்கள்.
அரியலூர், கடலூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களும் திறந்து வைத்தார்கள்.
அமைச்சர்கள் கலந்துகொண்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
தேனியில் விலையில்லா பொருட்கள்: அமைச்சர் வழங்கினார்
தேனி, மே. 19 -
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பேரூராட்சியில் நேற்று கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 2916 பயனாளிகளுக்கு ரூ. 118.10 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் ஆகியவற்றையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் 193 அங்கன்வாடி மையங்களுக்கு கொதிகலன், புதிய எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்புகளை தமிழக நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
தமிழக மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரி வசூல் நிதியை மக்களுக்கே சென்றடையும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மக்களுக்காக நான் மக்களால் நான் என்ற சிந்தனையுடன் இரண்டு ஆண்டுகளில் ஆட்சிப்பேறுப்பேற்று சாதனை படைத்து வருகிறார். அவற்றில் காவேரியில் தமிழ்நாட்டில் மீட்டெடுத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு வறட்சி நிவராணம், உணவு பாதுகாப்பை உறுதி செய்ய 20 கிலோ விலையில்லா அரிசி, வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்த ரூ.20 க்கு 1 கிலோ அரிசி, ஏழை மக்கள் வயிறாற உண்ண அம்மா உணவகங்கள், இல்லத்தரசிகளின் இன்னல்களை போக்குகின்ற விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஏழை பெண்கள் திருமணம் செய்து கொள்ள 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவித்தொகை, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு பசுமை வீடுகள், ஏழைகளுக்கு உயர்தரமான மருத்துவ
சிகிச்சை அளிக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் விபத்து நிவரணம் உட்பட பல்வேறு மக்கள் நல திட்டங்களை தமிழக முதல்வரின் தலைமையிலான அரசு சாதனை புரிந்து ஈராண்டு சரித்திரம் பேசும் பல்லாண்டு என்ற வெற்றி முழக்கத்துடன் தமிழக மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களின் நலன் கருதி, ஒரு புதுமையான மக்களை நாடி வருவாய்த்துறை என்ற அம்மா திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து அம்மனுக்களுக்கு தகுதி உள்ள நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இது போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் தலைமையில் செயல்படுகின்ற அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஐ. விஜயாராணி வரவேற்புரையாற்றினார், மாவட்ட ஊராட்சித்தலைவர் எஸ். மாகலிங்கம், நகர்மன்றத் தலைவர்கள் சிவக்குமார், முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தீபாவளிராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என். ஆண்டி, பண்ணைப்புரம் பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் லதாமுத்து விஜயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையதுகான், தேனி மாவட்ட கோ, கோ விளையாட்டு கழக தலைவர் ஓ.பி.இராவீந்தர்நாத்குமார், சிறப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் சுந்தர்ராஜ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) புகழேந்தி, வட்டாட்சியர் ஜவர்ஹால் பாண்டியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தேன்மொழி நன்றி கூறினார்.
Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,
No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,
Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine send your comments