Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

ஹாட் நியூஸ் (25-01-2012)

 

மகளிர் சுய உதவிக்குழு பெண் கொலை: கணவரிடம் தீவிர விசாரணை

சென்னை, ஜன. 25-

போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் ஆகாஷ் நகரைச் சேர்ந்த சுய உதவிக்குழு தலைவி அம்பிகா. நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டார். நள்ளிரவு 2 மணியளவில் போலீஸ் உடையில் அம்பிகாவின் வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள் மிகவும் துணிச்சலுடன் அவரை கடத்திச்சென்று வீட்டு அருகில் வைத்தே அவரது கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும்...

வீட்டை இடித்ததாக இளம்பெண் புகார்
சசிகலாவின் தம்பி திவாகரனை கைது செய்ய போலீஸ் தீவிரம்
நெருங்கிய கூட்டாளிகளை பிடித்து விசாரணை

திருவாரூர், ஜன. 25-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூர் கீழதெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தன்ராஜிடம் 21-ந்தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கடந்த 28.11.11-ல் மன்னார்குடியை சேர்ந்த திவாகரன் தூண்டுதலின் பேரில் ரிஷியூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமேனன், அ.தி.மு.க. கிளை செயலாளர் தமிழ்செல்வன், பஞ்சாயத்து செயலாளர் ராஜேந்திரன், குணசேகரன், வைத்தியநாதன், கணேசன் ஆகியோர் ரிஷியூர் கீழத்தெருவில் உள்ள என் வீட்டையும், எனது மாமனார் வீட்டையும் பொக்லைன் எந்திரத்தால் இடித்தனர்.

மேலும்...

ஊழலை சகிக்க முடியாமல் தாக்குதல் சம்பவம் நடக்கிறது
அன்னாஹசாரே கருத்தால் சர்ச்சை

ராலேகான் சித்தி, ஜன. 25-

ஊழல் எதிர்ப்பு வாதியான அன்னாஹசாரேக்கு நேற்று இரவு அவரது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் ஹலி ஹலிசோர் ஹாய் என்ற இந்திப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

மேலும்...

முந்தைய ஹாட் நியூஸ்

  • Bookmark and Share