Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
"கள்ளழகர்"பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை 7.10 மணிக்கு நடந்தது. பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆட்டம், பாட்டத்துடன் தண்ணீர் பீய்ச்சி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பிறகு மே 7ல் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். நேற்று காலை மூன்று மாவடியில் அவரை பக்தர்கள் எதிர்க்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளினார்.
அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. பின் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
அங்கிருந்து தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலுக்கு வந்த அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின் தங்க குதிரையில் ஒவ்வொரு மண்டக படிகளிலும் சென்று வந்தார். இதற்கிடையே அழகரை வரவேற்க வெள்ளி குதிரையில் வீரராகவ பெருமாள் காலை 6.50 மணிக்கு ஆற்றுக்கு வந்தார்.
காலை 7.10 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி "கோவிந்தா... கோவிந்தா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே வைகையாற்றில் இறங்கினார். சுற்றியிருந்த பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட மண்டகப்படியை சுற்றி வந்து அருள்பாலித்தார். இதைதொடர்ந்து வீரராகவ பெருமாள் 3 முறை அழகரை வலம் வந்து முதல் மரியாதை ஏற்றுக்கொண்டார். தீபாராதனைக்கு பிறகு காலை 8 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.
அங்கு மதியம் தீர்த்தவாரி உற்சவமும், அங்கப் பிரதட்சணமும் நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். நாளை(மே 10) காலை 7 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின் மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் திருமஞ்சனமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கறார். இரவு மீண்டும் ராமாயர் மண்டபத்திற்கு திரும்பும் அழகருக்கு 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை மறுநாள் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்பட்டு மே 14 காலை10 மணிக்கு கோயிலை சென்றடைகிறார்.